ரயில் பயணங்களின் போது...
வீட்டு ஜன்னல்களின் வழியே
கையசைக்கும் குழந்தைகளுக்கு
பதில் கையசைக்கும் கைகள் எனக்கில்லை
---------------------------------------------------------------
திட்டமிட்டு யாரையும் ஏமாற்றுகிற துணிவு
என்னகில்லையென்றாலும்
ஏதாவத்டு உணவகத்திலோ
மருந்தகத்திலோ
கொடுத்த பணத்தைவிட அதிகமாக தந்தால்
பேசாமல் வாங்கி வருபவனில்
நானும் ஒருவனே
---------------------------------------------------------------
எப்படியேனும்
எல்லோரிடமிருந்தும் தப்பித்து
வீடு வந்து கண்மூடினால்
என்னிடம் மாட்டிக் கொள்கிறேன்
---------------------------------------------------------------
நாள் முழுவதும் கூந்தலிலிருந்த பூவை
எந்தச் சலனமுமின்றி
எடுத்தெரிந்துவிட்டு
வேறு பூவைச் சூடிக் கொள்ள
எப்படி முடிகிறது
இந்தப் பெண்களால்
---------------------------------------------------------------
அவ்வளவு தொலைவிலிருந்து
குழந்தைகள் சாப்பிட உதவும்
நிலவில்
மனிதன் உயிர் வாழமுடியாது என்பதை
எப்படி நம்புவது?
---------------------------------------------------------------
'அ'-வுக்கு முந்தி எழுத்துக்கள் இல்லையெனினும்
'அ'- எழுதப் பழகிய என் கிறுக்கல்களெல்லாம்
'அ'-வுக்கு முந்திய எழுத்துக்களே
---------------------------------------------------------------
நான் யாரைப் பார்க்கப் போனாலும்
அவர் தனிமையில் இருந்துவிடக்கூடாதே
என்கிற பயம் எனக்கு
தனிமை
கலைக்கப்படுகிறபோது
ஏற்படும்
இழப்புகளை
நான் அறிவேன்
---------------------------------------------------------------
BACK
தபூ சங்கர் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
kavithaigal nandraga irunthana
'அ' க்கு முன் நான் எழுதியதுகூட
'அ'க்கு முந்தைய எழுத்தா என்ற சந்தேகம் எனக்கும் வந்துவிட்டது..?
வாழ்த்துகள்
Post a Comment